(பாறுக் ஷிஹான்)
ஒரு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள்
எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதை ரவூப் ஹக்கீம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் நாட்டின் நலன்கருதியும் நன்றிக்கடனுக்காகவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறோம் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேசிய காங்கிரஸின் 20 வது பேராளர் மாநாடு அண்மையில் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர்
ஒரு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பதை ரவூப் ஹக்கீம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.நாங்கள் நாட்டின் நலன்கருதியும் நன்றிக் கடனுக்காகவும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறோம்.அரசியல் என்பது காலத்தின் தேவை. இன்று பிரதமராக இருந்து ஜனாதிபதி தேர்தல் கேட்போர் எவரும் இல்லை.வழக்கமாக நான் கூறுவது போன்று பால்போத்தல்கள் உருண்டு ஓடுகின்றன.
இன்று முகப்புத்தக போராளிகளுக்கு அரசியல் என்பது புரியாத புதிராக இருக்கின்றது. ரிஷாத் பதியுதீன் என்பவர் அரசியலுக்கு நேற்று வந்த பிள்ளை.சொந்த தேவைகளுக்கு அப்பால் அந்த அந்த காலங்களில் தலைவர்களை தெரிவு செய்தது தேசிய காங்கிரஸ் என்பதை சகலரும் அறிய வேண்டும் என்றார்.