1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை

பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெறிநாய்க்கடி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (26) உயிரிழந்துள்ளார்

இவரின் மரணத்துடன் இதுவரையில் யாழ்ப்பாணத்தில் வெறிநாய்க்கடியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

வீட்டில்  காணப்பட்ட நாய் கடித்து, இரண்டு வாரங்களின் பின்னர், சுகவீனமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட வைத்திய அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதில் பெண்ணின் மரணத்துக்கு வெறிநாய் கடியால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டமையே காரணம் என முடிவு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 2,500 தெருநாய்கள் சுற்றித் திரிவதாகவும், வீதியில் செல்லும் மக்களை கடிப்பதால் யாழ்ப்பாணத்தில் வெறிநாய் நோயின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி