ஜனநாயக இடதுசாரி முன்னணியின்
தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அக்கட்சியின் செயலாளர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கலந்துரையாடப்பட்ட இலக்குகள் மற்றும் திட்டங்களை செயற்படுத்துவதில் கட்சியின் ஏனையவர்கள் காட்டிய தயக்கமே தாம் இந்தத் தீர்மானத்தை எடுக்க வழிவகுத்ததாக நிரோஷன் பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
"ஜனாதிபதித் தேர்தலுக்கு நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் பின்னர் மாற்றப்பட்டதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதைப் பற்றி வாதிடுவதில் அர்த்தமில்லை. உங்கள் குழுவுக்கும் மற்றவர்களுக்கும் முடிவெடுப்பதற்காக அன்று கூடிய தேர்தல் குழுவில் இருந்து வெளியேறினேன் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.