மக்களுக்குப் பிரச்சினையாக
உள்ள உழைக்கும்போது செலுத்தும் வரியை (Payee Tax) திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எஹலியகொட புதிய சந்தைக்கு அருகில் இன்று (28) இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.