மீரிகம பொகலகமவில் உள்ள
தேசிய மக்கள் படையின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (28) மாலை பிரசார அலுவலகத்தில் இருந்த மேசைகள், நாற்காலிகள் மற்றும் விளம்பரப் பலகைகளுக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தில் கட்டிடமும் சிறிது சேதமடைந்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்