ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு
ஆதரவு தெரிவிக்க தான் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சஜித் பிரேமதாசவின் வறுமை ஒழிப்பு மற்றும் சுபீட்சம் இயக்கம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு தலைவராக இவர் நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அகில இலங்கை சுபீட்ச அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் ஜகத் குமார சுமித்ரஆராச்சி செயற்படுகிறார்.