மத்துகம பொலிஸில் கடமையாற்றும்
சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்துகம பொலிஸில் கடமையாற்றும் மற்றும் மத்துகம நீதிமன்றில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்டே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளை விடுவிக்க இலஞ்சம் வாங்கச் சென்ற போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.