ஹம்பாந்தோட்டையில் இருந்து
கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (30) அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் தங்காலை மாரகொல்லி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதியால் அதிவேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பஸ் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் முன் இடது பகுதி சேதமடைந்துள்ளது.
பஸ் பாலத்தில் மோதியவுடன், ஐந்து பயணிகள் கால்வாயில் வீழ்ந்தனர், உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.