அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்துக்கு
அருகில் உள்ள கீனதெனிய கல்வெடபாலவுக்கு அருகில் வேன் ஒன்று ரயில் கடவையை கடக்கும்போது கண்டியில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதியதில் காயமடைந்த சாரதி வரகாபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெறும் போது வேனில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் வாகனம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.