1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வெளிநாட்டில் வேலை பெற்றுத்

தருவதாகக் கூறி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடந்த 28ஆம் திகதி ருவன்வெல பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சந்தேக நபர் ருவன்வெல்ல நகரில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்தி வந்த நிலையில் இவ்வாறு பண மோசடி மேற்கொண்டுள்ளார்.
 
அங்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 இலட்சம் ரூபாவை சந்தேக நபர் மோசடி செய்துள்ளார். 
 
இவர் இதற்கு முன்னர் மினுவாங்கொடை பிரதேசத்தில் வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடத்திய போதும் இவர் பணத்தை மோசடி செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் பணியகம் கூறுகிறது. 
 
சந்தேக நபரை ருவன்வெல்ல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி