நான்னேரிய பொலிஸ் பிரிவுக்கு
உட்பட்ட பிரிகுளம் பகுதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நான்னேரியா, பிரிகுளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றுக் (30) காலை, அவரது தாய் தொலைபேசியை எடுக்காததால், அவரது மகன் பக்கத்து வீட்டுக்காரரிடம் போய் பார்க்குமாறு தெரிவித்துள்ளார..
இதனையடுத்து அந்த நபர் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து கிடந்ததில் சந்தேகமடைந்ததால், நான்னேரியா பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் பொலிஸார் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டினுள் பெண்ணின் சடலம் காணப்பட்டது.
விசாரணையில், இந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துள்ளமை தெரிய வந்தது.
சடலத்தின் அருகில் கோடரி ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரின் கணவர் இதற்கு முன்னரே இறந்துவிட்டதாகவும், அவரது இரண்டு மகள்கள் மற்றும் மகன் வேலை பார்த்து வருவதாகவும், இறந்தவர் மட்டும் வீட்டில் வசித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நன்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்