மீண்டும் ஒரு முறை பொய்யான
வாக்குறுதிகளை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக நாடு 2022 இல் இருந்த நிலைக்குத் திரும்பும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குருணாகலில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் இயலும் ஸ்ரீலங்கா என்ற கருத்துக்கு வலுசேர்க்கும் நோக்கில் குருணாகலில் நேற்று (30) இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.