1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிளப் வசந்த என்றழைக்கப்படும்

சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடுவெல பதில் நீதிவான் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
29ஆம் திகதி காலை அமல் சில்வா கைது செய்யப்பட்டு பின்னர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
கொலையை செய்ய வந்த நபர்களுக்கு தங்குமிட வசதி மற்றும் ஆதரவை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரால் இஙர் கைது செய்யப்பட்டார்.
 
ஜூலை 8ஆம் திகதி அதுருகிரியவில் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரை ஓட்டிச் சென்ற சாரதி ஆகியோர் 28ஆம் திகதி இரவு பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 
 
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி