பத்தரமுல்லை - அகுரேகொட
இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இராணுவத் தலைமையகத்தில் கடமையாற்றும் வேளையில் இந்தச் சிப்பாய் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய லான்ஸ் கோப்ரல் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.