செப்டெம்பர் முதலாம் திகதியான
இன்று முதல் 25 நாட்களுக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத்தினரும் முகாம்களுக்குள் செல்வதையும் விடுமுறை இல்லங்களை முன்பதிவு செய்வதையும் தடை செய்ய இராணுவத் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த உத்தரவானது செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 25 வரை ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் பிற பதவிகளில் கடமை புரிந்தோருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னர் ஒதுக்கப்பட்ட ஓய்வு விடுதிகளின் பொறுப்பை ரெஜிமென்ட் இராணுவ நிர்வாகிகள் ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்வதை முற்றாக தடை செய்து இராணுவத் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் கட்சிகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும், அரசியல் கட்சிகளை தீவிரமாக பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.