ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் முகாமுடன் ஒத்துப் போகாதவர் என்றும் அதன் காரணமாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்க்ஷ நியமிக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
விரைவில் ஜனாதிபதியாகும் ஆசை நமலுக்கு இருக்கவில்லை. அதனால் எங்கள் முகாமில் இருந்து ஒரு பிரதிநிதியை அனுப்ப முயற்சித்தோம். ஆனால் எங்கள் முகாமில் ஒருவரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை் ரணில் எங்கள் முகாமுக்கு பொருந்தவில்லை. அதனால்தான் நாமலை நிறுத்தினோம் என்றார்.