கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாமின்
கொலை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மீது பொய்யான சாட்சியங்களை இட்டுக்கட்டியதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை பரிசீலிப்பதில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று விலகியுள்ளனர்.
இந்த மனுக்கள் எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்களில் ஒருவரான சுகத் மெண்டிஸினால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்மானத்தை தாம் அறிவித்துள்ளதால், இந்த மனுக்களை பரிசீலனை செய்வதிலிருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா அங்கு தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதுனி விக்கிரமசிங்கவும் தெரிவித்தார்.
அதன்படி, இந்த மனுவை இரு நீதிபதிகள் இல்லாத மற்றொரு நீதிபதிகள் குழாம் முன் விசாரிக்க உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை அடுத்த ஆண்டு மார்ச் 12ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.