1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்தியாவின் கெம்பேகவுடா

சர்வதேச விமான நிலையத்தில் (KIA)  தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று இலங்கை பிரஜைகளை பெங்களூரு விமான சுங்க அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

மூவரும் கொழும்பில் இருந்து வந்து விமான நிலையத்தில் இறங்கியவுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களைச் சோதனையிட்டதில் மலக்குடலில் பேஸ்ட் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் குழு கண்டுபிடித்ததாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,670.92 கிராம் ஆகும், இதன் மதிப்பு சுமார் 11.9 மில்லியன் இந்திய ரூபா.

இந்த மூவரும் தங்க கடத்தல் வலையமைப்புக்கு உதவியவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி