வாக்காளர்களின் சுயாதீனமான
பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆய்வுகள் தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
இவ்வாறான கணக்கெடுப்புகளில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படலாம் என சமன்
ஸ்ரீரத்நாயக்க ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களின் சுயாதீனமான கருத்துக்களை பாதிக்கும் வகையில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்துவதை தவிர்க்குமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.