அனைத்து மாவட்டங்களிலும்
தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இது இடம்பெற்றுள்ளது.
இதன்படி இன்று (03) பகல் 12.00 மணி முதல் 2.00 மணி வரை வைத்தியசாலைகளுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்படவுள்ளன.