வாகனங்களில் அரசியல்
விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்தில் குறித்த விளம்பரங்கள் அகற்றப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை வாகனங்களில் ஒட்டுவது சட்டவிரோத செயல் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.
விளம்பரங்களை அகற்றும் முயற்சியில் பொலிஸார் தலையிடும்போது வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அவற்றை உரிமையாளர்களே அகற்றிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.