பணத்தை பெற்றுக் கொண்டு
நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாத சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை இரத்துச் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,
சரத் விஜேசிறி டி சில்வா என்ற சட்டத்தரணியின் சட்டத் தொழிலையே இழத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு காணி வழக்குகளில் ஆஜராவதற்காக இந்தச் சட்டத்தரணி உரிமையாளரிடம் 44 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு முறையாக ஆஜராகவில்லை என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இவர் 3 மாதங்களுக்குள் 3 மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.