ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களின் நேரடி விவாதம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மார்ச் 12 இயக்கம் இந்த தொடர் விவாதங்களை நடத்துகிறது.
முதல் நாள் விவாதத்தில் நான்கு வேட்பாளர்கள் பங்கேற்பார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திலித் ஜயவீர, சுயேச்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர்கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாது என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த அமைப்புக்கு அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
சுற்று 2 மற்றும் 3 க்கு மேலும் 12 பேர்.
இந்த விவாதத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டத்தில் 12 வேட்பாளர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவாதங்கள் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
விவாதத்தின் போது வேட்பாளர்களுக்கு கேள்விகளை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கேட்கப்படும் கேள்விகள் குழுவால் தீர்மானிக்கப்படும் என்றும் மார்ச் 12 பிரசாரம் குறிப்பிடுகிறது.