1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு அறிவிப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் வழங்கிய விளக்கமறியல் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான உத்தரவு இன்று (04) வெளியிட திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும்  ஷஷி மகேந்திரன் ஆகியோர் தீர்ப்பு வழங்குவது ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி