தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்
பின்னதுவ மற்றும் இமதுவ பிரதேசங்களுக்கு இடையிலான 95 கிலோமீற்றர் கல்லுக்கு அருகில் இன்று (05) காலை லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
லொறியின் டயர் வெடித்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பின்னதுவ மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்திருந்தது.