பிபில - லிந்தகும்புர பிரதேசத்தில்
இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 47 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிபில மெதகம பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையை பணியாளர்கள் குழுவினரை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் அதே வீதியில் அதே திசையில் பயணித்த இ.போ. ச பஸ்ஸின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின்னர், குறித்த பஸ் சுமார் 20 மீட்டர் தூரம் நகர்ந்துள்ளதுடன், தனியார் பஸ் பலத்த சேதமடைந்துள்ளது.