1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சீதுவ பிரதேசத்தில்  விடுதி ஒன்றில்

தங்கியிருந்த கட்டுநாயக்க வர்த்தகப் பகுதியில் பணிபுரியும் பெண் ஒருவர் தூக்கத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சீதுவ, பேஸ்லைன் வீதி, மெரினா மாவத்தையில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலேயே இந்தக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கட்டுநாயக்க வர்த்தக வலயத்துக்கு உட்பட்ட  நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
மஹாஓயா பிரதேசத்தில் வசிக்கும் தனது கணவருடன் குறித்த பெண் இந்த தற்காலிக குடியிருப்பில் வசித்து வந்ததுடன், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 
உறங்கிக் கொண்டிருந்த பெண்ணைக் கொன்ற கணவன் குற்றச் செயலின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி