களுத்துறை தெற்கு தபால்
நிலையத்திலிருந்து சென்று வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் போது தபால் ஊழியரை தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.