ஐக்கிய மக்கள் சக்தியின்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெலிமடையில் இடம்பெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' பேரணியில் இணைந்துகொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டதற்காக கவலை தெரிவித்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும் மறைந்த அமைச்சருமான காமினி அத்துகோரளவின் சகோதரியுமான சட்டத்தரணி தலதா அத்துகோரள இரத்தினபுரி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராவார்.