1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொதுக்கூட்டத்துக்கு வந்த ஒருவரிடமிருந்து தோட்டா ஒன்றை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 

மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த நபர் சந்திவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 
 
ரணில் விக்கிரமசிங்க பொது பேரணிக்கு வருவதற்கு சற்று முன்னர் நடத்தப்பட்ட தேடுதலில், சந்தேக நபரின் பணப்பையில் உயிருள்ள தோட்டா கண்டுபிடிக்கப்பட்டதுடன், வாகரையை சேர்ந்த 24 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மூன்று வருடங்களுக்கு முன்னர் வீதியொன்றில் கண்டெடுக்கப்பட்ட உயிருள்ள தோட்டாவை தனது பணப்பையில் வைத்திருந்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி