ஜனதா விமுக்தி பெரமுனவின்
ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பார்த்துக் கொள்வோம்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தாக்கப்படுவர்" எனக் கூறியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்
தேசிய மக்கள் படையின் இலச்சினையுடன் கூடிய சட்டையை அணிந்த இவர் "நாங்கள் தேசிய மக்கள் படையின் உறுப்பினர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், இலங்கை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் உட்பட ஏனைய கட்சிகளை சேர்ந்த அனைவரையும் தாக்குவோம்" என்று பொதுவெளியில் சூளுரைத்தார். இந்த விடயம் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இவ்வாறானவர்களால் நாடு இரத்தக்களரியாக மாறும் அபாயத்தைக் காட்டுவதால், இது குறித்து அவசர விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறையை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார்.