2024ஆம் ஆண்டு ஜனாதிபதித்
தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை என இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறுகிறார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி கூறியபடி, கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் நிலைப்பாடும் பொருத்தமான தீர்மானமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,பொதுத் தமிழ் வேட்பாளர் அரியேந்திரனை ஆதரிக்க வேண்டும் என இளங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இதன்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.