இலங்கை-இங்கிலாந்து
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட தினத்தில் ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே நேற்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கோரிக்கை விடுத்தனர்.
இலங்கையில் தமிழ் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறல்கள் மற்றும் அந்நாட்டில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பங்கேற்பாளர்கள் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உத்தியோகபூர்வ சின்னத்தை காட்சிப்படுத்தினர்.
விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குரல் கொடுத்தனர்