ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் செப்டம்பர் 19-ஆம் திகதி பாடசாலை நடவடிக்கைகள் முடிந்ததும் கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.