பொருளாதார வீழ்ச்சியின்போது
மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்காக ஒத்துழைக்குமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்காமல் தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்கள் முன்வந்து ஜனாதிபதி பொறுப்பை கோருவது நகைப்புக்குரியது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ருவன்வெலயில் இன்று (09) பிற்பகல் நடைபெற்ற ‘ரணினால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்