பெலும்மஹர பகுதியில் உள்ள
மசாஜ் நிலையமொன்றுக்குள் வாள்களை ஏந்தியபடி நுழைந்த 6 பேர் இரு பெண்களைக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
மசாஜ் நிலையத்தில் 5 பெண்கள் இருந்ததாகவும், சந்தேக நபர்கள் அவர்களை அறையில் அடைத்து வைத்து அவர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகள், பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து, மசாஜ் நிலையத்தில் இருந்த இரு பெண்களை கடத்திச் சென்று கும்பலாக பலாத்காரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்பில் யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.