இரு பொறியியலாளர்கள் பயணித்த
கெப் வாகனம் ஒன்று இன்று (10) காலை கொட்டாவ பகுதிக்கு அணமித்த அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்ததாக கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை பரிமாற்ற கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் இரண்டு பொறியாளர்களுக்கோ அல்லது சாரதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றின் பொறியியலாளர்கள் இருவர் காலி பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போதே, கெப் வண்டியில் திடீரென தீப்பிடித்தது.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.