இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில்
ரணிலின் வாக்கு அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ். எம் மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணிலின் வாக்கு அநுரவுக்கு வழங்கப்பட்டாலும், நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை சஜித் பெறுவார் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
எமது அரசாங்கம் நிறுவப்பட்டவுடனேயே வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படும் என்றும் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரித் தொகைக்கு நியாயமான பலன்களை வழங்க பாடுபடுவோம் என்றும் தெரிவித்தார்.