விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவரை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று (11) பிணைஉத்தரவிட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் குறித்த சந்தேக நபர்கள் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.