நாட்டில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் அறுகம்பை பிரதேசத்திற்கு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பின்னர் 3௦ க்கும் மேற்பட்ட உல்லாசப்பயணிகள் வருகை தந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
அரசாங்கம் சமூக இடைவெளி பற்றி பெரிய கதைகளை எல்லாம் சமூக ஊடகங்களில் வெளியிடும் போது உல்லாசத்துறை தொழிலானது சமூக இடைவெளி இல்லாமல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழும்புகின்றது இவ்வாறு ஒவ்வொரு விடயமாக தவறு நடக்குமாயின் நிலைமை படு மோசமடையும் என்பது உறுதி!