1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

79 நெல் குருவி பறவைகளை

கூண்டுக்குள் அடைத்து விற்பனை செய்ய முயற்சித்தார் எனக் கூறப்படும் நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால்  இருபதாயிரம் ரூபா அபராதம் விதித்து கல்கிஸ்ஸ மேலதிக நீதிவான் ஹேமலி ஹல்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார்

காலி வீதியில் செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் வியாபார நிலையத்தில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
கூண்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 79 சிறு பறவைகளை பெல்லன்வில சரணாலயத்தில்  விடுவிக்குமாறு மேலதிக நீதிவான் பெல்லன்வில பிரதேச பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி