1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2024 ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதித்

தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 36 சதவீத வாக்குகளைப் பெறுவார் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.

இரண்டாவது இடத்தில் உள்ளசஜித் பிரேமதாச 32 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு 28 வீத மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு மூன்று வீத மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேலும் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு 6 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

அநுரகுமார திஸாநாயக்கவின் ஜூலை மாதத்திற்கான அங்கீகாரம் ஒரு வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

GXQCb pakAAsdib

சஜித் பிரேமதாசவின் மக்கள் அங்கீகாரம் நான்கு வீதத்தால் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி