வேலே சுதா என அழைக்கப்படும்
ஜி.டபிள்யூ சமந்த குமாரவின் அறையில் இருந்து நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படை அதிகாரிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலையின் விசேட பிரிவின் பிரிவு ஏ பிரிவு எண் 38 இல் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு கைதி வேலே சுதா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கையடக்கத் தொலைபேசியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகம் மேலும் விசாரணை நடத்தி வருகிறது.