ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான
அனைத்துப் பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் எந்தவொரு அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது ஆதரவாளர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஆணையம் வலியுறுத்தியது.
பொது அல்லது தனியார் வாகனங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் போன்றவற்றை அகற்றுவதற்கு இலங்கை பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களுக்கு 6 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 48 மணித்தியாலங்களுக்குள் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.