ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பாராளுமன்ற உறுப்பினர் மௌலானாவை ஏன் கட்சி உறுப்புரிமையை விலக்கக்கூடாது என்தற்கான காரணங்களை வினவி விசாரணை செய்வதற்காக கட்சியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குழுவுக்கு தனது விளக்கத்தை வழங்குமாறு கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் அலி சாஹிர் மெளலானாவுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் மௌலானாவுக்கு எதிரான விசாரணை கட்சி யாப்பின்படியும் இயற்கை நியதியின் அடிப்படையிலும் செயற்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற விடயம் இவ்வழக்கு கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் வந்தபோது தெளிவுபடுத்தப்பட்ட பின்னணியிலேயே இந்த விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் அறிவித்தார்.