கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, வீடு திரும்ப முடியாத மோதர ஸ்ரீ வெங்கடேஸ்வர இந்து கோவிலின் திருமண மண்டபத்தில் தங்கியுள்ள உணவு மற்றும் குடிநீர் இல்லை என்பதைக் காட்டி, முகநூலில் ஒரு சில குறிப்புகளை பதிவேற்றிய இளைஞர்கள் இருவரை மே 04 அன்று மோதர பொலிசார் கைது செய்துள்ளதாக (anidda.lk) தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர் ரேகா நிலுக்ஷி ஹேரத்தின் அறிக்கையின்படி, கொழும்பு, பதுள்ள,ஹப்புத்தல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 மலையகத் தமிழர்கள் கொழும்பில் உள்ள மோதரைக்கு வேலைக்கு வந்துள்ளனர், கொவிட் 19 தொற்றுநோயால், மார்ச் 20 அன்று கொழும்பில் ஊரடங்கு உத்தரவை அறிவித்ததும் பிற மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்தை தடை செய்தது. இதனால் மோதர திருமண மண்டபத்தில் தங்க நேரிட்டுள்ளது.
சி.டபிள்யூ.சியின் செயலாளர் ஆறுமுகம் தொண்டமானின் மகன் செந்தில் தொண்டமான் கூறுகையில்
இவ்வாறு தங்கி உள்ளவர்களுக்கு உணவு,குடிநீர் மற்றும் பிற வசதிகள் இல்லாததால், அருகிலேயே வசித்து வந்த இரண்டு இளைஞர்கள் அந்த இடத்திற்குச் சென்று இச் சம்பவத்தை முகநூலில் வெளியிட்டுள்ளனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செந்தில் தொண்டமானிடமிருந்து புகார்
பொலிஸ் ஊடகப் பிரிவின் அதிகாரியைத் தொடர்பு கொண்டபோது, சந்தேக நபர்கள் அனைத்து வசதிகளுடன் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், முகநூலில் பதிவேற்றிய குறிப்பை இளைஞர்கள் அகற்ற வேண்டும் என்றும் கோரி செந்தில் தொண்டமானுக்கு பதில் அளித்துள்ளார்.
அந்த இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி, அனுமதியின்றி மண்டபத்திற்குள் நுழைந்ததாக தெரிவித்து. மே 5 ஆம் தேதி இளைஞர்கள் மீது புதுக்கடை நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ரம்சி உட்பட பதினேழு எழுத்தாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு மே 3 அன்று "அச்சமற்ற மற்றும் பாகுபாடான பத்திரிகை" என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
இவர்கள் 17 பேரும் இணையத்தில் தவறாக செய்தி வெளியிடப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.பி. ஜாலியா சேனாரத்ன கூறுகையில், கொரோனா தொற்றுநோயின் போது தவறாக செய்திகளை வெளியிட்ட குற்றத்திற்காக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) அவர்களை கைது செய்தது.
உலக சுதந்திர ஊடக தினத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்ட முன்னாள் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, உலக ஊடக சுதந்திர தினத்தன்று, கொரோனா வைரஸை எதிர்த்து போராட்டம் நடத்திய இரண்டு பெண்கள் உட்பட 17 சமூக ஊடக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதை நாம் மறைக்க முடியாது.