திருகோணமலை மாவட்ட
நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வெள்ளிக்கிழமை (13) நீதிச்சேவை ஆணைக் குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பயாஸ் ரசாக் மாவட்ட நீதிபதியாகவும், ஜீவராணி கருப்பையா பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் இன்று மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.