விருப்பு வாக்குகளை எண்ண
வேண்டியிருந்தால் அந்த வாக்குகளின் கூட்டுத் தொகையுடன் ஒட்டுமொத்த முடிவும் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
ஒரு வேட்பாளருக்கு ஐம்பது சதவீத (50%) வாக்குகள் கிடைக்காவிட்டால், வாக்கு எண்ணும் மையங்களில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அதனையும் வாக்காக கருதி ஒட்டுமொத்த முடிவு வெளியிடப்படும் என்றார்.
மாவட்ட மட்ட விருப்பு பெறுபேறுகள் பெறப்பட்டு ஒட்டுமொத்த பெறுபேற்றுடன் சேர்த்து ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.