பாராளுமன்றத்தில் சுயமாக
செயற்படப் போவதாக உரையாற்றிய அருந்திக பெர்னாண்டோ நேற்று (13) மீண்டும் ஜனாதிபதியின் மேடையில் ஏறினார்
அண்மையில், அருந்திக பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவருக்கு ஆதரவைத் தெரிவிக்கத் தீர்மானித்தபோதும் எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு சாதகமாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்தே அவர் மீண்டும் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசார மேடையில் ஏறியுள்ளார்.