பாரத லக்ஷ்க்மன் பிரேமச்சந்திர
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா மற்றும் சமிந்த ரவி ஜயநாத் ஆகியோர் இந்த வழக்கின் 17ஆவது குற்றச்சாட்டிலிருந்து அதாவது, சட்டவிரோதமான T-56 துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிசங்கவினால் நேற்று (13) இந்த உத்தரவு பிறக்கப்பட்டது.